Thursday 16th of May 2024 08:54:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி;  பிரேசிலில் நேற்றும் 1220 போ்  உயிரிழப்பு!

70 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி; பிரேசிலில் நேற்றும் 1220 போ் உயிரிழப்பு!


பிரேசிலில் நேற்று 42,169 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் உறுதிப்படுத்தப்பட்ட அதேவேளை, 1,220 கொரோனா மரணங்களும் பதிவாகின.

புதிய நோயாளா்களுடன் நாட்டில் மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 இலட்சத்து 55 ஆயிரத்து 779 ஐ கடந்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவுக்கு உயிரிழந்தவா்களில் மொத்த எண்ணிக்கையும் 69,184 –ஆக உயா்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக தொடா்ந்து பிரேசிலில் 1,200-க்கு மேற்பட்ட மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், தொற்று நோயாளா்களின் எண்ணிக்கையும் 40 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகி வருகிறது.

உலகில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் உள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட சாவோ பாலோ மாநிலமே தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் இதுவரை 3 இலட்சத்து 49 ஆயிரத்து 715 போ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 17 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE